வவுனியா செட்டிக்குளம் வைத்தியசாலையில் உத்தியோகத்தர்களுக்கான விடுதி திறந்துவைப்பு!!

243

 
வவுனியா செட்டிக்குளம் ஆதார வைத்தியசாலையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட நிறைவுகாண் மருத்துவசேவை உத்தியோகத்தர்களுக்கான விடுதியினை வடமாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் இன்று( 30.01.2017) காலை 10.30 மணியளவில் உத்தியோகபூர்வமாக திறந்து வைத்தார்.

சுகாதார சேவையினை வலுப்படுத்தும் நோக்கத்தினை அடிப்படையாக கொண்டு அமைச்சரின் மாகாண குறித்தொகுக்கப்பட்ட அபிவிருத்தி நிதியின் கீழ் 9 மில்லியன் ரூபாய் செலவில் விடுதி அமைக்கபட்டுள்ளது.

அத்துடன் தின்மக்கழிவுகளை சேகரிக்கும் கழிவுத் கட்டிடத்தொகுதியொன்றும் 1.2 மில்லியன் செலவில் அமைக்கபட்டு இதன் போது திறந்து வைக்கப்பட்டது.

இந் நிகழ்வில் சுகாதார அமைச்சரின் பிரத்தியேக செயலாளர் ப.சத்தியசீலன், மாவட்ட சுகாதார பணிப்பாளர் பசுபதிப்பிள்ளை பவானி, வைத்தியர் மகேந்திரன், செட்டிக்குளம் ஆதார வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி , செட்டிக்குளம் கோட்ட கல்விப் பணிப்பாளர் யேசுதாஸன், செட்டிக்குளம் பிரதேச சபை முன்னாள் தவிசாளர் கபிரியல் அந்தோனி , செட்டிக்குளம் பிரதேச சபையின் முன்னாள் உப தவிசாளர் சந்திரமோகன், செட்டிக்குளம் மகாவித்தியாலய அதிபர் தர்மரட்னம் , கிராம அலுவலர், வைத்தியர்கள், நலம்விரும்பிகள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.