எலிசபெத் மகாராணிக்கு இரத்தினக்கல்லை அன்பளிப்பு செய்த வர்த்தகர் களுபோவில வைத்தியசாலையில் மாயம்!!

518

எலி­சபெத் மகா­ரா­ணிக்கு இரத்­தி­னக்­கல்லை அன்­ப­ளிப்பு செய்த, இரத்­தி­ன­பு­ரியை சேர்ந்த பிர­பல இரத்­தி­னக்கல் வர்த்­த­க­ரான நிமல் பதி­ரண களு­போவில் வைத்­தி­ய­சா­லையில் தங்­கி­யி­ருந்து சிகிச்சை பெற்­று­வந்­தி­ருந்த நிலையில் காணாமல் போயுள்­ளமை தொடர்பில் தற்­போ­து­வரை 10 பேரிடம் வாக்­கு­மூலம் பெற்­றுள்­ள­தாக கொஹு­வல பொலிஸார் தெரி­வித்­துள்­ளனர்.

காணாமல் போயுள்ள நிமல் பதி­ர­ணவின் குடும்­பத்­தினர், களு­போ­வில வைத்­தி­ய­சாலை ஊழி­யர்கள் மற்றும் அவர் தங்­கி­யி­ருந்து சிகிச்சை பெற்று வந்த அறை­யி­லுள்ள சக நோயா­ளிகள் ஆகி­யோ­ரி­டமே இவ்­வாறு வாக்­கு­ மூ­லங்கள் பெறப்­பட்­டுள்­ளன.

திடீர் சுக­யீனம் கார­ண­மாக பொல்­ஹேன்­கொ­டவிலுள்ள, தனது இரண்­டா­வது மனை­வியின் மகளின் கண­வ­ரினால், நிமல் பதி­ரண களு­போ­வில போதனா வைத்­தி­ய­சா­லையில் கடந்த 20 ஆம் திகதி அனு­ம­திக்­கப்­பட்டார்.

இவ்­வாறு அனு­ம­திக்­கப்­பட்­டி­ருந்த அவர், கடந்த 23 ஆம் திகதி மர்­ம­மான முறையில் வைத்­தி­ய­சா­லை­யி­லி­ருந்து காணாமல் போயுள்ளார்.

எனினும் அவர் ­கா­ணாமல் சென்று சுமார் ஒரு­வா­ர­மா­கி­யுள்ள நிலையில் கொஹு­வல பொலிஸார் தொடர்ந்து விசா­ர­ணை­களை முன்­னெ­டுத்­துள்­ளனர்.

இதே­வேளை, பிரித்­தா­னிய இள­வ­ரசி டயானா – சாள்ஸ் திரு­ம­ணத்­துக்கும் அதன்­பின்னர் இள­வ­ரசர் வில்­லியம்ஸ் – கேட் தம்­ப­தி­யி­னரின் திரு­ம­ணத்­துக்கு பயன்­ப­டுத்­தப்­பட்ட மோதி­ரத்தில் பதிக்­கப்­பட்­டுள்ள இரத்­தி­னக்­கல்லின் முதல் உரி­மை­யாளர் இவ­ராவார்.

காணா­மல்­போ­யுள்ள நிமல் பதி­ர­ண­வினால் கொள்­வ­னவு செய்­யப்­பட்ட இந்த இரத்­தி­னக்கல், எலி­சபெத் மகா­ராணி இலங்­கைக்கு வந்­தி­ருந்­த­வே­ளையில் அவ­ருக்கு அன்­ப­ளிப்­பாக வழங்­கப்­பட்­டி­ருந்த நிலையில் தற்போது அந்த இரத்தினக்கல் பதிக்கப்பட்ட மோதிரம் அவர்களது பரம்பரை மோதிரமாக கருத்தப்படுகின்றது.

தற்போது அம்மோதிரத்தை இளவரசி கேட் வில்லியம்ஸ் அணிந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.