காலியில் இரசாயன வாயுவை சுவாசித்த 54 பேர் வைத்தியசாலையில் அனுமதி!!

469

hos

காலி பத்தேகம, இதிகஸ்கெடிய பிரதேசத்திலுள்ள தொழிற்சாலை ஒன்றின் ஊழியர்கள் 54 பேர் திடீர் சுகவீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அந்த தொழிற்சாலையை சுத்தம் செய்வதற்கு பயன்படுத்தப்படும் இரசாயன திரவம் ஒன்றின் வாயுவை சுவாசித்தமையின் காரணமாக இவர்கள் சுகவீனம் அடைந்துள்ளனர். நேற்று இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

பாதிக்கப்பட்டவர்கள் பத்தேகம மற்றும் கராபிட்டிய வைத்திசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். எவ்வாறாயினும் இவர்களின் நிலை தொடர்பில் அச்சம் கொள்ளத் தேவையில்லை என வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.