வவுனியாவில் பணித்தடையை நீக்ககோரி சுவரொட்டிகள்!!

225

 
வவுனியாவில் நேற்று (30.01.2017) இரவு ஆசிரியருக்குரிய பணித்தடையை நீக்கக்கோரி துண்டுப்பிரசுரங்கள் அங்காங்கு ஒட்டப்பட்டுள்ளன. இத் துண்டுப் பிரசுரத்திற்கு இலங்கை ஆசிரியர் சங்கம் உரிமை கோரியுள்ளது.

கடந்த 10.01.2017 அன்று வடமாகாண கல்வித்திணைக்களத்திற்கு முன்னால் இடமாற்றம் கோரி வெளிமாவட்ட ஆசிரியர்களினால் மேற்கொள்ளப்பட்ட கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தைத் தொடர்ந்து மூன்று ஆசிரியர்களுக்கு பணித்தடை உத்தரவை வடமாகாண கல்வித்திணைக்களம் வழங்கியிருந்த நிலையில், தற்போது வடமாகாண கல்விச் செயலாளரின் வீட்டின் முன்பாக இலங்கை ஆசிரியர் சங்கத்தினால் துண்டுப்பிரசுரங்கள் ஒட்டப்பட்டுள்ளன.

இத் துண்டுப்பிரசுரங்களை வவுனியா நகரின் பல இடங்களிலும் காணக்கூடியதாக உள்ளது. குறிப்பாக வவுனியா கல்வித்திணைக்களம், வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயம், சைவப்பிரகாச மகளீர் கல்லூரி, இறம்பைக்குளம் மகளீர் கல்லூரிகளுக்கு அண்மையிலும் காணப்படுகின்றது.

ஜனநாயக விரோத பணிதடை உத்தரவை நீக்காதுவிடின் பாரிய தொழிற்சங்க போராட்டத்தை நடத்தப்போவதாக இலங்கை ஆசிரியர் சங்கம் எச்சரித்துள்ளது.