திருகோணமலையில் பாரிய தீ விபத்து : பல மணி நேரம் கடும் போராட்டம்!!

316

 
பாரிய தீ விபத்தொன்று திருகோணமலை கண்டி வீதியில் அபயபுர பகுதியில் அமைந்துள்ள மரக்கடை ஒன்றில் ஏற்பட்டுள்ளது. இந்த அனர்த்தம் இன்று அதிகாலை நான்கு மணியளவில் ஏற்பட்டு, ஏழு மணிவரையிலும் நீடித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவ இடத்திற்கு உடனடியாக வந்த திருகோணமலை நகரசபை தீயணைப்பு வீரர்களும், கடற்படை தீயணைப்பு வீரர்களும் ஒன்றிணைந்து தீயினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இந்த தீப்பரவலை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர ஏழு நீர்க்கொள்கலன்கள் அளவு நீர் பயன்படுத்தப்பட்டதாக தீயணைப்பு வீரர்கள் தெரிவித்தனர்.

கடையினுள் இருந்த பரவலான மரக்குற்றிகள் தீயினால் கருகியுள்ளதுடன் தீக்கான காரணம் இன்னும் அறியப்படாத நிலையில் உப்புவெளி பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.