வவுனியாவில் இரு வர்த்தக நிலையங்களில் திருட்டு!!

241

 
வவுனியா ஹொறவப்பொத்தானை வீதியிலுள்ள இரு வியாபார நிலையங்கள் உடைத்து பணம் கொள்ளையிடப்பட்டுள்ள சம்பவம் இன்று (31.01.2017) அதிகாலை 1.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகின்றது. இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

வவுனியா ஹொறவப்பொத்தான வீதியிலுள்ள சலூன், புடவைக் கடை என்பனவற்றில் இன்று அதிகாலை 1.30 மணியளவில் பணம் திருடப்பட்டுள்ளது.

தமது வழமையான செயற்பாடுகளை முடித்தக்கொண்டு நேற்று (30.01.207) இரவு 8 மணியளவில் தமது வியாபார நிலையங்களை மூடிவிட்டுச் சென்றுள்ளனர். எனினும் இன்று (31.01.2017) காலை தமது வியாபார நிலையங்களை திறப்பதற்குச் சென்றபோது வியாபார நிலையங்கள் உடைக்கப்பட்டுள்ளது தெரியவந்தள்ளது.

இதையடுத்து பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டடு சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டபோது சலூனிலிருந்து 10 ஆயிரம் ரூபாவும் புடவைக்கடையிலிருந்து இரண்டு இலட்சம் ரூபா வரையில் திருடப்பட்டுள்ளதாக முறைப்பாட்டில் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

புடவைக்கடையிலிருந்த சி. சி. ரி கமராவினை உரிமையாளர் நிறுத்திவிட்டுச் சென்றுள்ளார். என்பது குறிப்பிடத்தக்கது.

மேலதிக விசாரணைகளை வவுனியா குற்றத்தடுப்பு பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.