வவுனியா வர்த்தக நிலையத்தில் கொள்ளை : துப்பாக்கியுடன் ஒருவர் கைது!!

316

வவுனியா ஹொறவப்பொத்தானை வீதியிலுள்ள இரு வியாபார நிலையங்கள் உடைத்து பணம் கொள்ளையிடப்பட்டுள்ள சம்பவம் இன்று (31.01.2017) அதிகாலை 1.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

இச் சம்பவம் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்ட வவுனியா குற்றத்தடுப்பு பொலிஸார் சந்தேக நபர் ஒருவரை கைது செய்ததுடன் அவரது வீட்டில் சோதனைகளை மேற்கொண்டபோது கட்டுத்துவக்கு ஒன்றையும் கைப்பற்றியுள்ளனர்.

இச் சம்பவம் தொடர்பான விசாரணைகள் நடைபெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.