வவுனியாவில் வயல்வெளியிலிருந்து ஆணொருவரின் சடலம் மீட்பு!!

428

 
வவுனியா கனகராயன்குளம் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட சின்ன அடம்பன் கிராமத்தில் வயல்வெளியிலிருந்து சடலம் ஒன்று இன்று காலை (31.01.2017) மீட்க்கப்பட்டுள்ளது.

சின்ன அடம்பன் கிராமத்தில் வசித்துவந்த எஸ்.விநாயமூர்த்தி வயது 54 என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த ஊர் மக்கள்
நேற்று (30.01) மாலை 5 மணிக்கு தனது வயல் நிலத்தை பார்வையிடச் சென்றவர் வீடு திரும்பவில்லை.

அவரது கைத்தொலைபேசிக்கு அழைப்புக்கள் ஏற்படுத்தியிருந்தபோதும் அழைப்புக்களுக்கு பதில் வராத காரணத்தினால் இரவு 1.30 மணியளவில் 119 பொலிஸ் பிரிவுக்கு விநாயகமூர்த்தியை காணவில்லை என்று முறைப்பாடு செய்யப்பட்டதுடன் இன்று காலையில் உறவினர்கள் அவரை தேடியபோது அவர் சடலமாக தனது வயல்வெளியில் காணப்பட்டதாகவும் தெரிவித்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து கனகராயன்குளம் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.