வவுனியாவில் மின்சாரம் தாக்கி குடும்பஸ்தர் உயிரிழப்பு!!

722

வவுனியா நாகர்இலுப்பைக்குளம் பகுதியில் காட்டில் வைக்கப்பட்ட மின்சாரத்தில் சிக்கி குடும்பஸ்தர் உயிரிழந்த சம்பவம் ஒன்று நேற்று இரவு 9 மணியளவில் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்..

வவுனியா நாகர் இலுப்பைக்குளம் பகுதியிலுள்ள காட்டுப்பகுதியில் வைக்கப்பட்ட மின்சாரத்தில் சிக்கி தவசிகுளம் பகுதியைச் சேர்ந்த விக்கினேஸ்வரன் கிரிதாஸ் என்ற 30வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்துள்ளார். நேற்று இரவு 9 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில் உடனடியாக பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.

சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிசார் இரவு 11 மணியளவில் சடலத்தினை வவுனியா பொது வைத்தியசாலையில் கையளித்ததுடன் மரண விசாரணைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.