தந்தையின் உயிரை பறித்த பாலம் : மூன்று பெண் பிள்ளைகளின் வியக்க வைக்கும் காரியம்!!

233

பெண்களினால் முடியாத வேலை என கூறிய விடயத்தை மூன்று இளம் பெண்கள் வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளனர்.

காலி, நெழும் பிரதேசத்தில் வாழும் தில்கி, சந்துனி மற்றும் நிழுக்ஷி என்ற மூவரும் தந்தையின் பாதுகாப்பில் வாழ்ந்த மகள்களாகும். இந்த மூன்று பிள்ளைகளுக்கும் யாரும் எதிர்பார்க்காத சந்தர்ப்பத்தில் தந்தையின் அன்பு இழக்கப்பட்டது.

ஆயிரம் கணக்கிலான மக்கள் பயணித்த பாலம் குறித்த மூன்று மகள்களின் தந்தையின் உயிரை பறித்துக் கொண்டுள்ளது. அதன் பின்னர் இந்த பிள்ளைகள் ஒரு விடயத்தை மிகவும் தீவிரமாக மனத்திற்குள் எடுத்துக் கொண்டனர்.

பாலம் உயிரைப் பறித்தது. இடிந்து விழுந்ததனால் தந்தையின் உயிர் பறிபோனது. எனினும் தாங்கள் தந்தையின் பாசத்தை இழந்து வாடுவதைப் போல வேறு யாரும் இழக்கக்கூடாது. அதற்காக குறித்த பாலத்தை அமைக்க வேண்டும் என குறித்த மூவரும் திட்டமிட்டுள்ளனர்.

பெண் பிள்ளைகள் என்ற போதிலும் மனதில் வலுவுடன் மேலும் சில இளைஞர்களுடன் இந்த வேலையில் இவர்கள் இறங்கியுள்ளனர்.

முயற்சியை கைவிடாமல் இந்த மூவரும் அண்மையில் குறித்த பாலத்தை வெற்றிகரமாக அமைக்கும் பணிகளை நிறைவு செய்துள்ளனர்.