வட­மா­கா­ண­சபைத் தேர்தலை ­நி­றுத்­துமாறு­ கோரும் மனுக்கள் மீதான விசாரணை இன்று உயர்நீதிமன்றில்!!

345

SLCourt

வட­மா­கா­ண­சபைத் தேர்­தலை இடை­நி­றுத்­து­மாறு தமிழ் தேசி­யக் ­கூட்­ட­மைப்பின் தேர்தல் விஞ்­ஞா­ப­னத்­திற்கு எதி­ராக தாக்கல் செய்­யப்­பட்­டுள்ள மனுக்கள் குறித்து இன்­றைய தினம் உயர் நீதி­மன்றில் விசாரணை நடைபெறவுள்­ளது.

வடமாகாண சபைக்கான தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்திற்கு எதிராக இதுவரை ஐந்து அடிப்படை மனித உரிமை மீறல் மனுக்கள் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் அரசியல் அமைப்பினை மீறி உள்ளதாக உத்தரவிட வேண்டும். அத்துடன் இந்த மனுக்கள் மீதான தீர்ப்பு வழங்கப்படும் வரை இடைக்கால நிவாரணமாக வடமாகாணசபைத் தேர்தலை இடைநிறுத்துமாறு உத்தரவிட வேண்டுமென்றும் இந்த மனுக்களில் கோரப்பட்டுள்ளது.

இந்த மனுக்களை தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் தேசப்பற்றுள்ள பௌத்த முன்னணி, சுவர்ண ஹன்சா மன்றம், பெளத்த மகா அமைப்பு, யாழ். பௌத்த முன்னணி ஆகிய ஐந்து அமைப்புக்களே தாக்கல் செய்துள்ளன.

தமிழ் தேசி­யக் ­கூட்­ட­மைப்பின் தேர்தல் விஞ்­ஞா­ப­னத்­திற்கு எதி­ராக தாக்கல் செய்­யப்­பட்­டுள்ள இந்த மனுக்­களில் வட­மா­கா­ண­சபைத் தேர்­தலை இடை­நி­றுத்­து­மாறு இடைக்­கால நிவா­ரணம் கோரப்பட்டுள்ளமை­யினால் அது குறித்து இன்­றைய தினம் உயர் நீதி­மன்றம் விசா­ரணை நடத்­த­வுள்­ளது.

தமிழ் தேசி­யக்­ கூட்­ட­மைப்பின் தேர்தல் விஞ்­ஞா­பனம் இலங்­கையின் ஒரு­மைப்­பாட்டை மீறு­வ­துடன் தனி நாட்­டுக்­கான பாதை­யாக அமைந்­துள்­ளது. இலங்கை தமி­ழ­ர­சுக்­ கட்­சி­யி­னதும் தமிழ் தேசி­யக் ­கூட்டமைப்­பி­னதும் நோக்கம் இலங்­கையின் ஆட்­பு­லத்தில் ஒரு தனி நாடு அமைப்­ப­தென நீதி­மன்றம் வெளிப்­ப­டுத்த வேண்டும் என்றும் அந்த மனுக்­களில் கோரப்­பட்­டுள்­ளன.