நல்லூரில் அட்டகாசம் செய்த மோட்டார் சைக்கிள் கும்பல் கைது : ஆயுதங்கள் மீட்பு!!

389

 
யாழ்ப்பாணம் நல்லூர் அரசடி வீதி சந்தியில் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு ஒருவருக்கு காயம் ஏற்படுத்தி, வர்த்தக நிலையம் ஒன்றுக்கு தீயிட்டு சேதத்தை ஏற்படுத்தியதாக கூறப்படும் மோட்டார் சைக்கிள் குழுவின் சந்தேகநபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கோப்பாய் தவசகுளம் பகுதியில் குறித்த நபர்களை கைது செய்துடன், மூன்று நாட்கள் தொடர்ச்சியான தேடுதல்களின் பின்னர் ஐந்து சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்களிடம் இருந்த 6 வாள்கள், ஒரு கை கோடரி, ஒரு மோட்டார் சைக்கிள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இன்று யாழ், நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட உள்ளனர்.

மோட்டார் சைக்கிள் குழுவை சேர்ந்த மேலும் சிலரை கைது செய்ய யாழ். பொலிஸார் விரிவான விசாரணைகள் மேற்கொண்டு வருகின்றன.