விபத்தில் இரு இளைஞர்கள் பலி!!

350

பசறை – கனவருல்ல பகுதியில் மோட்டார் சைக்கிள் ஒன்று பஸ் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளானதில் இரண்டு இளைஞர்கள் பலியாகியுள்ளனர்.

மோட்டார் சைக்கிளில் 3 பேர் பயணித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், அதில் ஒருவரின் வயது 22 எனவும் மற்றைய இளைஞருக்கு 21 வயது எனவும் தெரியவந்துள்ளது.

இதேவேளை, உயிரிழந்துள்ள ஒருவர் இராணுவத்தில் பணிபுரிந்து வந்தவர் என ஆரம்பக்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

மேலும், விபத்து சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.