பணத்துக்காக பெற்ற தாயை கொடூரமாக கொலை செய்த கொடூரன்!!

210

கேகாலை – பிங்தெனிய பகுதியில் தனது தாயை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்த மகன் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

வெலிகபொல – விகிரவிட்ட பகுதியில் வைத்து குறித்த சந்தேகநபரை பொலிஸார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவத்தில் 86 வயதான தாயே உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

தாய்க்கும் மகனுக்கும் இடையில் ஏற்பட்ட நிலத்தகராறு காரணமாகவே குறித்த மகன் தனது தாயை கொலை செய்துள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

மேலும் குறித்த சம்பவத்தில் உயிரிழந்த தாயின் 54 வயதான மகனே கைது செய்யப்பட்டுள்ளார் என கேகாலை பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.