வவுனியாவிலுள்ள விற்பனை நிலையங்களில் அத்தியாவசியப் பொருட்களான மைசூர் பருப்பு ஒரு கிலோ 159ரூபா, இறக்குமதி செய்யப்பட்ட நெத்தலிக்கருவாடு தாய்லாந்து ஒரு கிலோ 490ரூபா, இறக்குமதி செய்யப்பட்ட நெத்தலிக்கருவாடு துபாய் 405ரூபா, பாசிப்பயறு ஒரு கிலோ 205ரூபா,
வெள்ளைச் சீனி 93ரூபா, உருளைக்கிழங்கு இறக்குமதி செய்யப்பட்டது 115ரூபா போன்ற பொருட்கள் பாவனையாளர் அலுவலக அதிகார சபையினால் வெளியிடப்பட்ட விலைகளுக்கு அமைவான விலையில் விற்பனை செய்யவேண்டும்.
அதைவிட அதிக விலையில் இப்பொருட்களை விற்பனை செய்யும் வர்த்தகர் நிலையங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக வவுனியா வர்த்தக சங்கம் தெரிவித்துள்ளது.