வவுனியா பூந்தோட்டம் சனசமூக நிலையம் இன்று (01.02.2017) காலை 10.30 மணிக்கு வடமாகாண சுகாதார அமைச்சர் மருத்துவர் ப. சத்தியலிங்கத்தினால் உத்தியோகபூர்வமாகத்திறந்து வைக்கப்பட்டது.
வவுனியா நகரசபையின் வருடாந்த நிதி பாதீட்டு திட்டத்தின் கீழ் ரூபா 4 மில்லியன் செலவில் அமைக்கப்பட்ட பூந்தோட்டம் சனசமூக நிலையக்கட்டடம் உத்தியோக பூர்வமாக திறந்து மக்கள் பாவணைக்காக கையளிக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் வவுனியா நகரசபைச் செயலாளர் ஆர்.தயாபரன், வடமாகாணசபை உறுப்பினர் செந்தில்நாதன் மயூரன், பூந்தோட்டம் சனசமூக நிலையத்தலைவர் திரு.வேலாயும், பூந்தோட்டம் கிராமசேவையாளர், பூந்தோட்டம மகாவித்தியாலய அதிபர், நகரசபை உத்தியோகத்தர்கள், தொழிநுட்பவியலாளர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.