ரீ56 துப்­பாக்­கியை காட்டில் எறிந்து விட்டு பொலி­ஸா­ருக்குத் தகவல் கொடுத்த நபர்!!

231

மட்­டக்­க­ளப்பு, ஏறாவூர் பொலிஸ் பிரி­வி­லுள்ள சவுக்­கடிக் காட்டுப் பகு­தியில் துப்­பாக்கி ஒன்றை மீட்டுள்­ள­தாக ஏறாவூர் பொலிஸார் தெரி­வித்­தனர். நேற்று முன்­தினம் கிடைத்த தகவல் ஒன்றையடுத்து ஏறாவூர் பொலிஸார் சவுக்­கடிக் கிரா­மத்­துக்குச் சென்று காட்டுப் பகு­தியில் தேடு­தலில் ஈடு­பட்­டனர்.

அதன் போது, பயன்­ப­டுத்தத் தக்க வகையில் காணப்­பட்ட ரீ–56 ரக துப்­பாக்­கியை பொலிஸார் மீட்டுள்ளனர். பின்னர் மேற்­கொள்­ளப்­பட்ட விசா­ர­ணை­களின் போது ஏறாவூர் நகர பிர­தே­சத்தைச் சேர்ந்த ஒருவர் சந்­தே­கத்தின் பேரில் கைது செய்­யப்­பட்­டுள்ளார். அத்­துடன், 119 க்குத் தகவல் தெரி­வித்த மற்­றொரு நபர் தேடப்­பட்டு வரு­வ­தாக பொலிஸார் தெரி­வித்­தனர்.

தேட­ப்படும் நபர் தமது வீட்டில் வைத்­தி­ருந்த இந்தத் துப்­பாக்­கியை சவுக்­கடிக் காட்டில் வீசி விட்டு 119க்குத் தகவல் வழங்­கி­ய­தா­கவும் விசா­ர­ணை­க­ளி­லி­ருந்து தெரியவந்துள்ளது. பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.