வவுனியாவில் சீனிக்கு தட்டுப்பாடு : கொள்வனவாளர்களினால் சீனி கொள்முதல் நிறுத்தம்!!

535

 
கொழும்பில் கொள்முதல் செய்யப்பட்டு வவுனியாவில் கட்டுப்பாட்டு விலையான 93ரூபாய் விலைக்கு விற்பனை செய்யமுடியாமல் இருப்பதாக தெரிவித்து நேற்று முதல் சீனிக் கொள்வனவில் ஈடுபடப் போவதில்லை என்று நேற்று (01.02.2017) மாலை வவுனியா வர்த்தகர் சங்கத்தில் சீனிக் கொள்வனவாளர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதனால் வவுனியாவில் சீனிக்கு பெரும் தட்டுப்பாடு நிலவவுள்ளது. இலங்கை வர்த்தக மானியில் கட்டுப்பாட்டு விலையாக 93 ரூபாவாக விற்பனை செய்யுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து கொழும்பில் கொள்முதல் செய்யப்பட்டு வவுனியாவிற்கு எடுத்துவந்து விற்பனை செய்யும்போது சில்லறை விற்பனையாளர்களுக்கு 90 ரூபாவிற்கு விற்பனை செய்யவேண்டிய தேவை ஏற்படுகின்றது.

அவர்கள் உள்ளுர் வியாபார நிலையங்களில் 93 ரூபாவாக விற்பனை செய்யவேண்டும். சீனி கொள்வனவு செய்து போக்குவரத்து செய்து வவுனியாவிற்கு எடுத்து வந்து விற்பனை செய்யமுடியாத கட்டத்தில் உள்ளதால் நேற்று முதல் வவுனியாவிற்கான சீனி கொள்வனவினை நிறுத்தியுள்ளதாகவும். இது விடயம் தொடர்பாக ஏற்கனவே அரச மட்டத்தில் கலந்துரையாடப்பட்டுள்ளதாகவும் அதில் தமக்கு சாதகமான பதில் கிடையாத பட்சத்தில் நேற்று வவுனியா வர்த்தக சங்கத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில் தாம் இந்த முடிவிற்கு வந்துள்ளதாகவும் வவுனியா சீனி கொள்வனவாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இக் கலந்துரையாடலில் வவுனியா வர்த்தக சங்கத் தலைவர் ரி.கே.இராஜலிங்கம், செயலாளர், பொருளாலர் மற்றும் நிர்வாக உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.