வவுனியாவில் நேற்று முன்தினம் கட்டுத்துவக்கு வெடித்ததில் ஒருவர் படுகாயமடைந்து வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக மேலும் தெரியவருகையில்..
நேற்று முன்தினம் இறம்பைக்குளம் பகுதியைச் சேர்ந்த பிரான்சிஸ் என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தை இரவு தனது கல்னாட்டிகுளம் பகுதியிலுள்ள வயலை பார்வையிடுவதற்காக சென்றுள்ளார்.
அங்கு காட்டு யானைகள் நின்றதை அவதானித்து அவற்றை கலைத்துக் கொண்டு சென்றபோது வயலில் வைக்கப்பட்ட கட்டுத் துவக்கில் அகப்பட்டு இரண்டு கால்களும் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.