மாணவனின் முதுகை பதம் பார்த்த ஆசிரியர் : 25 இடங்களில் அடித்த அடையாளம்!!

214

மட்டக்களப்பு பிரதேசத்தில் உள்ள பாடசாலையில் கல்வி பயிலும் மாணவர் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மட்டக்களப்பிலுள்ள பிரபல பாடசாலை ஆசிரியர் ஒருவர் அந்த மாணவனை கடுமையாக தாக்கியதை அடுத்து காயத்திற்குள்ளான மாணவன் நேற்றைய தினம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்ட்டுள்ளார்.

தரம் மூன்றில் கல்விப் பயிலும் 8 வயது மாணவனே இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் குறித்த சிறுவனின் பெற்றோர்கள் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளனர்.

சிறுவனின் உடம்பில், அடிப்பட்ட 25 அடையாளங்கள் இருந்ததாக சிறுவனின் பெற்றோர் தமது முறைப்பாட்டில் பதிவு செய்துள்ளனர். இது தொடர்பில் பாதிக்கப்பட்ட சிறுவனிடம் வினவிய போது,

“வகுப்பறையை விட்டு மலசலகூடம் சென்று மீண்டும் வகுப்பறைக்கு திரும்பிய போதே ஆசிரியர் என்னை தாக்கினார்” என அந்த மாணவன் தெரிவித்துள்ளார்.

சம்பவம் தொடர்பில், காத்தான்குடி பொலிஸா்ர மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.