யுவதிகளை மிரட்டி நினைத்ததை சாதித்த பொலிஸ் அதிகாரி : மடக்கிப்பிடித்த ஊழியர்கள்!!

238

நீர்கொழும்பு நகரில் உள்ள உடல் பிடிப்பு நிலையம் ஒன்றுக்குள் பலவந்தமாக பிரவேசித்து அங்கிருந்த யுவதிகளின் சேவையை பெற்றுக்கொண்டு கப்பமாக பணத்தை பெற்றுக்கொண்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

புத்தளம் பொலிஸ் பிரிவில் சேவையாற்றும் உப பொலிஸ் பரிசோதகர் ஒருவரே இவ்வாறு நீர்கொழும்பு பொலிஸாரால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டுள்ள இந்த உப பொலிஸ் பரிசோதகர் நீர்கொழும்பு நகரில் இயங்கும் உடல் பிடிப்பு நிலையத்திற்கு சென்று அங்குள்ள முகாமையாளர் மற்றும் ஊழியர்களை மிரட்டி இலவசமாக சேவையை பெற்றுக்கொண்டு பணத்தை கப்பமாக பெற்று வந்துள்ளார்.

இலவசமாக சேவையை பெற்றுக்கொள்ளும் இந்த அதிகாரி பின்னர் முகாமையாளரை மிரட்டி பணத்தை பெற்றுக்கொள்வதுடன் மதுபான போத்தலை கேட்டும் அச்சுறுத்தி வந்துள்ளார்.

இந்த நிலையில், நேற்று அங்கு வந்த பொலிஸ் அதிகாரியை நிலையத்தின் உரிமையாளர் மற்றும் ஊழியர்களை பிடித்து நீர்கொழும்பு பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

இந்த பொலிஸ் அதிகாரி புத்தளம் பொலிஸ் பிரிவின் மோசடி தடுப்பு பிரிவில் கடமையாற்றி வருபவர் என தெரியவந்துள்ளது.