மகளுக்காக சாகும் வரையில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தந்தை!!

240

கல்பிட்டிய பகுதியில் உள்ள தந்தை ஒருவர் மகளுக்காக சாகும் வரையில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். இந்த நபர் அவரின் மகளின் கல்விக்காக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

பாடசாலையில் கோரப்பட்ட அனைத்து ஆவணங்களும் ஒப்படைக்கப்பட்ட நிலையிலும், அனுமதி மறுக்கப்பட்டதாலேயே உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். தந்தையுடன் அவரது மகளும் இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

இதேவேளை, காரணம் எதுவுமின்றியே குழந்தையின் அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தந்தையின் இந்த உண்ணாவிரத போராட்டம் குறித்து உரிய அதிகாரிகள் கவனம் செலுத்துமாறு சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.