வவுனியா பூந்தோட்டம் மகா வித்தியாலயத்தின் இல்ல மெய்வல்லுநர் திறனாய்வுப் போட்டி!!

441

 
வவுனியா பூந்தோட்டம்  மகா வித்தியாலயத்தின் 2017ம் ஆண்டுக்கான இல்ல மெய்வல்லுநர் திறனாய்வு இன்று (02.02.2017) மாலை வவுனியா லயன்ஸ் கழக மைதானத்தில் இடம் பெற்றது.

பாடசாலையின் அதிபர் திருமதி கி.நந்தபாலன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் பாராளுமன்ற குழுக்களின் பிரதித்தலைவருமான செல்வம் அடைக்கலநாதன், சிறப்பு விருந்தினர்களாக வட மாகாண சபை உறுப்பினர்களான செந்தில்நாதன் மயூரன், G.T லிங்கநாதன் ஆகியோருடன்,

கெளரவ விருந்தினர்களாக முன்னாள் வடமாகாண சபை உறுப்பினரும் கோட்டக்கல்விப்பணிப்பாளர் நடராஜ், உடற்கல்வி உதவிப்பணிப்பாளர் சுபசிங்க , வவுனியா மக்கள் வங்கி உதவியாளர் கோடீஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இங்கு உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர், நான்கு நாட்கள் மைதானங்கள் வழங்கப்பட்டு சிறப்பாக இவ் விளையாட்டுப் போட்டியை சிறப்பாக ஒருங்கிணைத்த பாடசாலைச்சமூகத்துக்கு பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கினறேன்.

இடைவேளையின் போது இடம்பெற்ற அன்ன நடனம் மிகச்சிறப்பாக இருந்தது. அதை பழக்கிய மற்றும் பங்குபற்றிய பாடசாலை மாணவர்கள் , ஆசிரியர்களுக்கு வாழ்த்துக்கள். இப்பாடசாலையானது வளங்கள் குறைவான நிலையிலும் மாணவர்கள் பலரை பல்கலைக்கழகத்துக்கு அனுப்பியமை பெருமை தருகின்றது.

தூர இடங்களில் இருந்து வந்து வன்னி மாவட்டத்தின் பல பகுதிகளிலும் கடைமையாற்றிக் கொண்டிருக்கிறார்கள் ஆசிரியர்கள் பலர். அவர்களுக்கு எனது நன்றிகள் .போரின் போதும் உயிரைக்கூட பொருட்படுத்தாது மரங்களுக்கு கீழ் சேவையாற்றியவர்கள் எமது ஆசிரியர்கள். எனவே மாணவர்களாகிய நீங்கள் கல்வியில் சிறந்து விளங்கி அவர்களுக்கு பெருமை சேர்க்க வேண்டும்.

மாணவர்கள் களியாட்டங்களிலும் , தொலைக்காட்சி திரைப்படங்களிலும் கவனத்தை செலுத்தாது கல்வியில் முன்னேற வேண்டும். பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் தங்களைப் போன்று கஸ்டப்படக்கூடாது என்று மாணவர்களாகிய நீங்கள் படித்து நல்ல நிலைக்கு வரவேண்டும் என்பதற்காக தங்களை வருத்தி உங்களுக்காக கஸ்டப்படுகின்றார்கள்.

மாணவர்கள் நீங்கள் அதை உணர்ந்து உங்கள் கல்வியில் முன்றேங்களை பெறவேண்டும். பெற்றோர்களாகிய நீங்கள் தொலைக்காட்சி போன்றவற்றில் மூழ்காமல் உங்கள் பிள்ளைகளுடன் நேரத்தை செலவழியுங்கள்.

ஒரு காலத்திலே முதலாவதாக விளங்கிய எமது மாகாணம் இன்று பின்தங்கியுள்ளது. மாணவர்கள் தேவையற்ற செயற்பாடுகளில் ஈடுபடக்கூடாது. உண்மையில் வன்னி மாவட்ட இளைஞர்களை எண்ணி பெருமை கொள்கிறேன். அவர்கள் அப்படியான செயற்பாடுகளில் ஈடுபடுவதில்லை . பாடசாலைக்கு தேவையான உதவிகளை வழங்கவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.