நல்ல வேளை இவர்கள் இலங்கை அணியில் இருந்து விட்டார்கள் : நான் தப்பித்தேன் : சங்ககார!!

295

இலங்கை அணியின் நம்பிக்கை நட்சத்திரமான விளங்கியவர் குமார் சங்ககார. இவர் இலங்கை அணி விளையாடும் மூன்று வித போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர், உள்ளூர் மற்றும் வெளிநாடுகளில் நடக்கும் தொடர்களில் பங்குபெற்று வருகிறார்.

இந்நிலையில் சங்ககாரவிடம் பந்துவீச்சாளர்கள் குறித்து கேள்வி வைக்கப்பட்டுள்ளது. அவர் கூறுகையில், தான் சந்தித்ததிலே பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரரான வசிம் அக்ரமின் பந்துவீச்சு தான் அபாயகரமாக இருந்தது.

அவரது பந்துவீச்சை எதிர்கொள்வது கடினம் என்றும் வித்தியாசமாக வீசுவார் என்று கூறியுள்ளார். அவரிடம் உலகில் உள்ள எந்த துடுப்பாட்டக்காரர்களை பற்றிக் கேட்டால் சட்டென்று விடை வரும் என்றும் அவர் ஒரு கிரிக்கெட் மேதை என புகழாரம் சூட்டியுள்ளார்.

இதற்கு அடுத்தபடியாக அவுஸ்திரேலியா அணியின் சுழற்பந்து வீச்சாளர் சேன் வோன் பந்து வீச்சை எதிர் கொள்வது கடினம் என்றும் அதைத் தொடர்ந்து இந்திய வீரர் ஷகிர்கான் மற்றும் இங்கிலாந்து வீரர் கிரீம் சுவானின் பந்து வீச்சுகளை தான் எதிர் கொள்வதற்கு சிரமப்பட்டதாக கூறியுள்ளார்.

ஒரு வகையில் தான் அதிர்ஷ்டகாரன், எனென்றால் தலை சிறந்த பந்துவீச்சாளர்களான முத்தையா முரளிதரன் மற்றும் சமிந்த வாஸ் தங்கள் அணியில் இருந்துவிட்டனர். இல்லையென்றால் கடினம் தான் என கூறியுள்ளார்.