மக்களின் உயிரைக் குறி வைக்கும் சீனாவின் பிளாஸ்டிக் அரிசி!!

254

சந்தையில் விற்கப்படும் அனைத்து விதமான உணவு பொருட்களிலும் இரசாயனம் மற்றும் கலப்படங்கள் அதிகமாக கலக்கின்றார்கள்.

அந்த வகையில் சீனாவில் தயாரிக்கப்படும் போலியான ப்ளாஸ்டிக் அரிசிகள் மற்றும் கலப்படம் மிக்க உணவுப் பொருட்களை இந்தியா, வியட்நாம், சிங்கப்பூர், இந்தோனேசியா போன்ற ஆசிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றது.

இது போன்ற போலியான அரிசிகள் தாவரம் மற்றும் மரங்களில் இருந்து, கிடைக்கும் ஒட்டும் தன்மைக் கொண்ட ஒருவகை ஆர்கானிக் பிசின் மூலமும், உருளைக்கிழங்கை தொழிற்சாலைகளில் இருந்து தயாராகும் ரெசினையும் கலந்து தாயாரிக்கின்றார்கள்.

எனவே இப்படி தயாரிக்கப்படும் ப்ளாஸ்டிக் அரிசிகள் இயற்கையான அரிகளோடு கலக்கும் போது, அதை நம்மால் கண்டுபிடிப்பது மிகவும் கடினமாக உள்ளது.
இதை அறியாமல் ப்ளாஸ்டிக் அரிசியை சமைத்து சாப்பிடும் போது, நமது உடம்பின் ஜீரண உறுப்புகளின் அனைத்து செயல்பாடுகளும் கடுமையான பாதிப்புகளை அடையச் செய்கிறது.

இது குறித்து, சிங்கப்பூரின் விவசாய மற்றும் கால்நடை உணவு அதிகார மையம் கூறியதாவது, இறக்குமதி செய்யப்படும் அரிசி மற்றும் உணவுகள் பரிசோத்த பின்னரே பயன்பாட்டிற்கு அனுமதிக்கப்படுகிறது.

இது வரையில் செய்த சோதனையின் மூலம் ப்ளாஸ்டிக் அரிசிகள் ஏதும் சிக்கவில்லை. எனினும் நாங்கள் தீவிரமாக கண்காணித்து வருகின்றோம் என்று கூறியுள்ளார்.

ஆனால் இதுவரை சீனாவின் உற்பத்தி செய்யப்படும் ப்ளாஸ்டிக் அரிசிகளின் விற்பனைகள் ஆதார பூர்வமாக சிக்கவில்லை என்று கூறியுள்ளார்.

மேலும் நாம் சமைக்கும் போது, அது ப்ளாஸ்டிக் அரிசியாக இருந்தால், அது அதிக வெப்பம் காரணமாக விறைப்பாக கடிமடைந்துக் காணப்படுவதுடன், தண்ணீரில் போடும் போது, மேல் பகுதியின் மிதந்தவாறு இருக்கும்.

எனவே மக்கள் சமைக்கும் போது, மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.