வவுனியா இ.போ.ச பேரூந்து ஊழியர்கள் இன்றும் பணிபுறக்கணிப்பு : மக்கள் சிரமம்!!

276

 
வவுனியா இ.போ. சபையின் டிப்போ ஊழியர்கள் தங்களுக்கு வவுனியா பழைய பேருந்து தரிப்பிடத்தை தருமாறு கோரியும் வவுனியா டிப்போ முகாமையாளரை மாற்றுமாறு கோரியும் தமக்கு ஒரு முடிவு கிடைக்கும் வரை பணி புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இ.போ.ச ஊழியர்கள் நேற்று (02.02.2017) தொடக்கம் வடமாகாண ரீதியாக இலங்கைப் போக்குவரத்து சபையின் அலுவலகத்தின் வாயிலை மூடி அலுவலக வளாகத்தில் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுவருகின்றார்கள்.

இதனால் போக்குவரத்து செய்வதில் மக்கள் பெரும் சிரமத்தை எதிர்நோக்குகின்றார்கள். அத்துடன் பாடசாலைக்கு செல்லும் மாணவர்கள், அரச உத்தியோகத்தர்கள் பருவ கால சீட்டுடன் வந்தும் நேரத்துக்கு செல்ல முடியாத நிலையில் காத்திருந்ததையும் அவதானிக்க கூடியதாக இருக்கின்றது.

வவுனியா A9 வீதியில் புதிதாக அமைக்கப்பட்ட பேருந்து நிலையத்தில் சேவையாற்றுவதில் தனியார் பேருந்து ஊழியர்கள் இடையூறு ஏற்படுத்துவதுடன் தங்கள் மீது தாக்குதல் நடத்துவதாகவும் அதன் காரணமாக வவுனியா மத்திய பேருந்து நிலையத்தை மீளவும் தங்களுக்கு வழங்குமாறு கோரிக்கையை முன்வைத்து இலங்கை போக்குவரத்துச்சபை ஊழியர்கள் பணி பகிஸ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றார்கள்.