சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் பெற்ற வெற்றியானது பாரியதொரு விடயம் என அவுஸ்திரேலிய அணித் தலைவர் மைக்கல் கிளார்க் சுட்டிக்காட்டியுள்ளார்.
இங்கிலாந்து அணிக்கெதிரான சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரை 2-1 என்ற ஆட்டக்கணக்கில் கைப்பற்றிய பின்னர் கருத்து வெளியிட்ட போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அநேகமானவர்களுக்கு இந்த தொடர் பாரியதொரு விடயம் இல்லாத போதிலும் அவுஸ்திரேலிய வீரர்களுக்கு இந்த தொடர் மிகப் பெரிய விடயம் எனவும் அவர் கூறியுள்ளார்.
சொந்த நாட்டில் நடைபெறவுள்ள குளிர்கால ஆஷஸ் தொடரில் இந்த வெற்றி எவ்வாறு தாக்கம் செலுத்தும் என்பதை கூற முடியாது எனவும் மைக்கில் கிளார் குறிப்பிட்டுள்ளார்.
ஒருநாள் அணி என்ற வகையில் மகிழ்ச்சியுடன் நாடு திரும்புவதாக அவுஸ்திரேலிய அணித் தலைவர் கூறியுள்ளார்.