வவுனியா இ.போ.ச சாலைக்கு விரைந்த செல்வம் அடைக்கலநாதன் : பரபரப்பான சூழ்நிலை தொடர்கின்றது!!

289

 
இன்று (03.02.2017) பிற்பகல் 2.30 மணியளவில் வவுனியா மாவட்ட செயலகத்தில் அரசாங்க அதிபர் தலைமையில் இடம்பெற்ற விஷேட கலந்துரையாடலில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், கே.கே.மஸ்தான், வடமாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம், வடமாகாண சபை உறுப்பினர்களான ஜி.ரி.லிங்கநாதன், செ.மயூரன், ஜெயதிலக, ஆகியோர் கலந்து கொண்டு இ.போ. ச சாலை ஊழியர்களின் பிரச்சினைக்கு தீர்வு பெற்றுக் கொடுப்பது தொடர்பாக கலந்துரையாடப்பட்டு இறுதியில் நாளை 11 மணியளவில் இடம்பெறவுள்ள கலந்துரையாடலில் முடிவு பெற்றுத்தருவதாக உணவுத் தவிர்ப்பில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது.

இதையடுத்து அங்கு சற்று பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டதுடன் ஊழியர்கள் தமது போராட்டத்தினை கைவிடப்போதில்லை என்றும் தொடர்ந்தம் தமது போராட்டம் இடம்பெறும் என்றும் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.