வவுனியாவில் இரு பொதுப் பூங்காக்கள் முதலமைச்சர் விக்னேஸ்வரனால் திறந்து வைப்பு!!

362

 
வவுனியா நகரசபை பொதுப் பூங்கா நெல்சிப் திட்டத்தின் கீழ் நவீனமயப்படுத்தப்பட்டு நகரசபையின் நிதி ஒதுக்கீட்டில் மொத்தம் 9 மில்லியன் ரூபா நிதியில் அமைக்கப்பட்ட பூங்கா இன்று காலை 9.30 மணியளவில் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனால் உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டது.

அதையடுத்து வவுனியா குருமன்காட்டில் வவுனியா நகரசபையின் பன்முகப்படுத்தப்பட்ட 3 மில்லியன் ரூபா நிதியில் அமைக்கப்பட்ட சிறுவர் பூங்காவினையும் வடமாகாண முதலமைச்சர் திறந்து வைத்தார்.

வவுனியா நகரசபை செயலாளர் ஆர்.தயாபரன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவசக்தி ஆனந்தன், செல்வம் அடைக்கலநாதன், கே.கே. மஸ்தான், வடமாகாண சுகாதார அமைச்சர் மருத்துவர் ப.சத்தியலிங்கம், வடமாகாண சபை உறுப்பினர்களான ஜி.ரி.லிங்கநாதன், ம.தியாகராசா, செ.மயூரன், ஜெயதிலக, உள்ளுராட்சி உதவி ஆணையாளர் அசங்க காஞ்சன குமார, முன்னாள் நகரசபை செயலாளர் ச.சத்தியசீலன், வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை செயலாளர் திருமதி சுகந்தி கிஷோர், நகரசபை உத்தியோகத்தர்கள், ஊழியர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.