வவுனியாவில் கலாச்சார மண்டபம் முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரனால் திறந்து வைப்பு!!

580

 
இன்று (03.02.2017) காலை 9.30 மணிமுதல் 11.30 மணிவரை வவுனியாவில் பல்வேறு கட்டிடங்கள் வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரனால் உத்தியோக பூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் வடமாகாண சுகாதார அமைச்சர் மருத்துவர் ப.சத்தியலிங்கம், வடமாகாண சபை உறுப்பினர்களான ஜி.ரி.லிங்கநாதன், செ.மயூரன், ஜெயதிலக, உள்ளுராட்சி உதவி ஆணையாளர் அசங்க காஞ்சன குமார, வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபைச் செயலாளர் திருமதி சுகந்தி கிஷோர், நகரசபை உத்தியோகத்தர்கள், ஊழியர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

உலகவங்கி மற்றும் அவுஸ்ரேலியா அரசாங்கத்தின் நிதியுதவியுடன் வடக்கு கிழக்கு உள்ளுராட்சி சேவைகள் மேம்படுத்தல் திட்டத்தின் கீழ் 59.93 மில்லியன் செலவில் வவுனியா தெற்கு சிங்கள பிரதேச சபையின் கலாச்சார மண்டபம், கல்நாட்டினகுளம் மருதநிலம் பொழுதுபோக்கு மையம், 50மில்லியன் ரூபா செலவிலும் அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.