வவுனியா, ஒமந்தையில் வன்னி அறுசுவையகம் இன்று (03.02.2017) மதியம் 2.30 மணியளவில் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரனால் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், வடமாகாண சபை உறுப்பினர்களான செ.மயூரன், உள்ளுராட்சி உதவி ஆணையாளர் அசங்க காஞ்சனகுமார, வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை செயலாளர் திருமதி சுகந்தி கிஷோர், திடீர் மரண விசாரணை அதிகாரி திரு.கிஷோர், நகரசபை உத்தியோகத்தர்கள், ஊழியர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
ஓமந்தை பாரம்பரிய உணவகம் 2.3 மில்லியன் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.