வவுனியா சிதம்பரபுரம் பழனி முருகன் ஆலய யாத்திரிகள் ஓய்வு மண்டபம் திறந்துவைப்பு!!

273

 
இன்று (03.02.2017) காலை 12.30 மணியளவில் வவுனியா சிதம்பரபுரம் பழனி முருகன் ஆலய யாத்திரிகள் ஓய்வு மண்டபம் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரனால் உத்தியோக பூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் வடமாகாண சுகாதார அமைச்சர் மருத்துவர் ப.சத்தியலிங்கம், வடமாகாண சபை உறுப்பினர்களான ஜி.ரி.லிங்கநாதன், செ.மயூரன், ஜெயதிலக, உள்ளுராட்சி உதவி ஆணையாளர் அசங்க காஞ்சனகுமார, வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை செயலாளர் திருமதி சுகந்தி கிஷோர், நகரசபை உத்தியோகத்தர்கள், ஊழியர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

சிதம்பரபுரம் பழனி முருகன் ஆலய யாத்திரிகள் ஓய்வு மண்டபம், 3 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.