சிக்கலில் முகநூல் : கோடிகளை கொட்டி பிழைத்தது!!

235

இப்போது சமூக வலைத்தளங்களில் மிகப் பிரதானமானது முகநூல் பக்கமே. தற்போது பாரிய அளவு விமர்சனங்கள் முகநூல் நிறுவனம் மீது திரும்பியுள்ளது.

முகநூல் நிறுவனம் புதிய சர்ச்சையில் சிக்கிக் கொண்டு கோடிகளை கொட்டிக் கொடுத்துள்ள காரணத்தினாலேயே இவ்வாறு விமர்சனங்களை சந்திக்க நேர்ந்துள்ளது.

அதாவது அண்மையில் இன்னுமோர் நிறுவனத்தின் தொழில் நுட்பத்தை பயன்படுத்திய குற்றச்சாட்டு முகநூல் மீதும் நிறுவுனர் மார்க் மீதும் சுமத்தப்பட்டது.

இந்தக் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்ட நிலையில் 500மில்லியன் அமெரிக்க டொலர்களை அபராதமாக கொடுத்துள்ளது முகநூல் நிறுவனம்.

இந்த அபராதத் தொகை கிட்டத்தட்ட 75280000000.00 ரூபாய் வரையிலும் இலங்கைப் பெறுமதி ஆகும். ஒரு தொழில் நுட்பத்தை பயன்படுத்தியமைக்காக இத்தனை அளவு அபராதம் கொடுக்கப்பட்டமை வியப்பாக பேசப்படுகின்றது.

இதேவேளை இதன் படி ஒரு பக்கம் வறுமை, பிணி, பட்டினி என மக்கள் செத்து மடிய மற்றொரு பக்கம் இவ்வாறான நிலையும் உலகில் தொடர்ந்து வருவதாக சமூக வலைத்தளங்கள் விமர்சிக்கின்றன.

இந்த விடயம் ஒரு வகையில் முதலாளித்துவத்தையும் எடுத்துக்காட்டுவதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.