இலங்கையின் 69வது சுதந்திர தினம் நாளை கொண்டாடப்படவுள்ளது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில் தேசிய சுதந்திர தினத்தில் பேஸ்புக் பக்கத்திலுள்ள இலங்யைர்கள் இணைந்து உலக சாதனை ஒன்றை ஏற்படுத்த தயாராகி வருகின்றனர்.
சுதந்திர தினமான நாளை காலை 8 மணியில் இருந்து 10 மணி வரையிலான இரண்டு மணி நேரங்களுக்குள் தங்கள் பேஸ்புக் பக்கத்தின் cover புகைப்படமாக நிலையான அளவு தயாரிக்கப்பட்ட தேசியக் கொடியை பதிவு செய்யவுள்ளனர். இதனூடாக உலகில் இதுவரை குறைந்த காலப்பகுதியினுள் அதிக cover புகைப்படம் மாற்றிய சந்தர்ப்பம் இதுவாக அமையும்.
பேஸ்புக் நிறுவனத்தினால் மேற்கொள்ளப்படும் அனைத்து மாற்றங்களும் கண்கானிக்கப்படுகின்றது. இலங்கையர்களின் முயற்சி வெற்றியளித்தால் உலகத்திலேயே முதல் முறையாக குறைந்த காலப்பகுதியில் அதிக மக்கள் cover புகைப்படமாக தேசிய கொடியை பதிவேற்றம் செய்யப்பட்ட சந்தர்ப்பமாக இது பதிவாகும்.
தங்களின் வீட்டின் முன்னால், வாகனங்களில் தேசிய கொடியை ஏற்றுவது இலகுவான விடயமாகும். உலகளாவிய ரீதியில் இவ்வாறு தேசிய கொடியை ஏற்றுவதன் மூலம் சிறந்த முன் உதாரணத்தை ஏற்படுத்த முடியும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
விசேடமாக வெளிநாட்டில் வசிக்கும் இலங்கையர்களும் இந்த நடவடிக்கையில் இணையுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இலங்கையின் பெயரை உலகம் முழுவதும் கொண்டு செல்வதற்கு இணையுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.