உலக அழிவுக்கு இந்த 3 நிகழ்வுகளே காரணமாக அமையும் : எச்சரிக்கும் ஆய்வாளர்கள்!!

271

உலகில் ஒட்டுமொத்த மனிதகுலமும் அழிந்தொழிவதற்கு காரணமாக முக்கிய 3 காரணிகளை பட்டியலிட்டு எச்சரித்துள்ளனர் பிரபல பல்கலைக்கழக ஆய்வாளர்கள்.

உலகம் அழிவது குறித்து சமீபகாலமாக பல்வேறு தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன. இதன் தொடர்ச்சியாக தற்போது ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக ஆய்வாளர்கள் குழு புது ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டு உலக தலைவர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

குறித்த ஆய்வறிக்கையில், உகலம் கொடுமையான நோய் தொற்று, கடுமையான காலநிலை மாற்றம் மற்றும் அச்சுறுத்தும் அணுவாயுத யுத்தம் ஆகியவைகளால் ஒட்டுமொத்த மனிதகுலமும் அழிந்தொழியும் என எச்சரித்துள்ளது.

ஆனால் தற்போதையை அரசியல் சமூக சூழலை எடுத்துக்கொண்டால் குறித்த அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் எந்த நடவடிக்கையும் உலக அரசியல் வட்டாரங்கள் மேற்கொள்ளவில்லை என்பது துரதிர்ஷ்டவசமானது என ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக ஆய்வாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

மட்டுமின்றி உடனடி தேவையாக வல்லரசு நாடுகள் உருவாக்கிக் குவிக்கும் உயிரியல் ஆயுதங்களை கட்டுப்படுத்துவது முக்கிய கடமையாக உள்ளது எனவும் தெரிவித்துள்ளது.

சமகாலத்தில் அரங்கேறும் பல நிகழ்வுகளும் உலக அழிவு என்பது மிக அருகாமையில் உள்ளது என்பதை துல்லியமாக படம்போட்டு காட்டுவதாக குறிப்பிட்ட ஆய்வாளர்கள், தேசிய அளவில் முன்னெடுக்கும் தொடர் நடவடிக்கைகளை சர்வதேச அளவுக்கு கொண்டு செல்ல உலக தலைவர்கள் முயற்சி மேற்கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளனர்.

உலக மக்களை அச்சுறுத்திய ebola மற்றும் zika தொற்று என்பது சர்வதேச அளவில் தடுக்கப்படவேண்டியதும், அது உலக தலைவர்களின் கடமை எனவும் குறிப்பிட்டுள்ளது.

பருவநிலை மாற்றம் குறித்த விவாதங்கள் மற்றும் அதுசார்ந்த முடிவுகள் விரைந்து எடுக்கப்பட்டு நடவடிக்கைகளை இப்போதே மேற்கொள்ள வேண்டும் எனவும் அந்த ஆய்வறிக்கை கேட்டுக்கொண்டுள்ளது.

கொடிய நோய் தொற்று, பருவநிலை மாற்றம் என்பவை தேச எல்லைக்கோடுகளை எப்போதும் மதிப்பதில்லை என எச்சரிக்கும் ஆக்ஸ்போர்டு ஆய்வாளர்கள் சர்வதேச ஒத்துழைப்பு மற்றும் ஒருமித்த கருத்து ஏற்பட்டால் மட்டுமே இது சாத்தியம் எனவும் சுட்டிக்காட்டியுள்ளது.