வவுனியாவில் இலங்கையின் 69வது சுதந்திரதின நிகழ்வுகள்!!

234

 
வவுனியாவில் இன்று (04.02.2017) காலை 8.20 மணிக்கு சுதந்திர நிகழ்வுகள் வவுனியா நகரசபை மைதானத்தில் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் எம்.பி.ஹோகன புஸ்பகுமார தலைமையில் நடைபெற்றது.

வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே, வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கே.காதர்.மஸ்தான், வடமாகாண சபை உறுப்பினர் ஜெயதிலக, மேலதிக அரசாங்க அதிபர் த.திரேஸ்குமார், நகரசபைச் செயலாளர் ஆர்.தயாபரன்,

வன்னி மாவட்ட ஸ்ரீலங்கா சுதந்திர பட்டதாரிகள் சங்க இணைப்பாளர் ம.ஆனந்தராஜ், வவுனியா மாவட்ட சுதந்திரக்கட்சி அமைப்பாளர் வாசல, வன்னி மாவட்ட ஜக்கிய தேசியக்கட்சி அமைப்பாளர் கருணதாச மற்றும் மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள், பிரதேச சபை உத்தியோகத்ர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டதுடன் முப்படையினரின் அணிவகுப்பு மரியாதையுடன் சுதந்திர தின நிகழ்வு நடைபெற்றது.