1980களில் தமிழ், ஹிந்தித் திரையுலகில் வலம்வந்த ஸ்ரீதேவி திருமணத்திற்குப் பின்னர் திரைப்படங்களில் இருந்து ஒதுங்கியிருந்தார்.
நீண்ட இடைவெளிக்குப் பின்னர் சென்ற வருடம் அவரது நடிப்பில் வெளிவந்த இங்லிஷ் விங்லிஷ் அவருக்குப் பெரியதொரு வெற்றிப்படமாக அமைந்தது. ஒரு நடிகையின் நடிப்புத்திறமை என்றும் அழிவதில்லை என்று பலரையும் அந்தப் படம் கருதவைத்தது.
தற்போது தெலுங்குத் திரையுலகின் புகழ் பெற்ற எழுத்தாசிரியரான கோனா வெங்கட் தன்னுடைய கதை ஒன்றினால் ஈர்க்கப்பட்டுள்ள ஸ்ரீதேவி அதில் நடிப்பதற்கும் ஒப்புக் கொண்டுள்ளார் என்று தெரிவித்துள்ளார்.
நடிகை ஸ்ரீதேவியின் கணவரும் திரைப்படத் தயாரிப்பாளருமான போனி கபூர் மூன்று மொழிகளில் இப்படத்தினைத் தயாரிக்க முடிவு செய்துள்ளதாகவும் அவர் கூறுகின்றார். இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தின் மற்ற விபரங்கள் விரைவில் வெளியிடப்படும் என்று கோனா வெங்கட் தனது இணையதளத் தகவலில் தெரிவித்துள்ளார்.