வவுனியாவில் இலங்கைப் போக்குவரத்து சபை ஊழியர்களின் பணிப் பகிஷ்கரிப்பானது இன்றைய தினம் (04.02.2017) 3ம் நாளாக தொடர்கின்றது.
உண்ணாவிரதப் போராட்டத்தில் 13 இ.போ.ச ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். அவர்களில் இருவரின் நிலை கவலைக்கிடமான நிலையில் இருப்பதாக வைத்தியர்கள் தெரிவித்தனர்.
இவ் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு ஆதரவாக வடமாகாணம் முழுவதும் எதிர்ப்புத் தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடும் இவ்வேளை இன்றைய தினம் (04.02.2017) தமது ஆதரவினை வழங்கும் முகமாக யாழ்ப்பாண இ.போ.ச போக்குவரத்து ஊழியர்கள் வவுனியா நகரில் இருந்து உண்ணாவிரதம் இடம்பெறும் வவுனியா இ.போ.ச சாலைக்கு பதாதைகள் ஏந்தியவாறு பேரணியாக வந்து ஆதரவை வழங்கினார்கள்.