வவுனியாவில் ஆயுதமுனையில் 3 வீடுகளில் கொள்ளை!!

758

 
வவுனியா வாரிக்குட்டியூர் 4ம் யுனிட் பகுதியில் நேற்று(03.02.2017) இரவு 8.45 மணியளவில் மூன்று வீடுகளில் ஆயுதமுனையில் கொள்ளையிடப்பட்டுள்ளது. இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்..

நேற்று இரவும் 8.45 மணியளவில் வவுனியா வாரிக்குட்டியூர் 4ம் யுனிட் பகுதியில் உள்ள வீடு ஒன்றிற்கு சென்ற கொள்ளையர்கள் தம்மை சிஐடி எனத் தெரிவித்து வீட்டில் உள்ளவர்களின் அடையாள அட்டைகளை காட்டுமாறு தெரிவித்துள்ளனர்.

வீட்டின் குடும்பத்தலைவர் அடையாள அட்டையை எடுக்கச் சென்றவேளை அவரையும் வீட்டில் உள்ளவர்களையும் ஆயுதமுனையில் மிரட்டி 17 பவுண் தங்க நகைகள், 66 000 ரூபாய் பணம், கைத்தொலைபேசி ஒன்று உட்பட பெறுமதியான பொருட்களை கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர்.

கொள்ளையர்கள் தங்கள் முகங்களை கறுப்புத் துணியால் மறைத்திருந்ததாகவும் வாள், கத்தி உட்பட பயங்கர ஆயுதங்களை வைத்திருந்ததாகவும் பணம், நகைகளைத் தருமாறு தம்மைத் தாக்கியதாகவும் வீட்டின் உரிமையாளர் தெரிவித்தார்.

இதே நேரம் அப் பகுதியில் மூன்று வீடுகளில் கொள்ளயிடப் பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவ இடத்திற்குச் சென்ற தடயவியல் நிபுணர்கள் மோப்ப நாயின் உதவியுடன் விசாரணைகளை மேற்கொண்டுவரும் அதேவேளை பூவரசங்குளம் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.