நடிகை அஞ்சலி ஜேர்மனியில் தலைமறைவு?

614

Anjali

நடிகை அஞ்சலி வெளிநாட்டில் தலைமறைவாகி விட்டதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. சித்தி வீட்டில் இருந்து மாயமான பிறகு முதல் தடவையாக போலீஸ் நிலையத்தில் தலை காட்டினார். அதன் பிறகு யாரும் அவரை பார்க்க வில்லை.

அஞ்சலி எங்கு இருக்கிறார் என்பது மர்மமாகவே உள்ளது. தெலுங்கு படங்களில் நடிப்பதாக தகவல்கள் வந்தன. ஆனாலும் அதை உறுதிபடுத்த முடியவில்லை. அந்த படப்பிடிப்புகளில் கூட அவரை பார்க்க முடிய வில்லை என்கின்றனர். அரசியல்வாதி உறவினர் ஒருவரை அஞ்சலி ரகசிய திருமணம் செய்து கொண்டதாக சமீபத்தில் செய்திகள் வந்தன. இதற்கு அஞ்சலி தரப்பில் இருந்து மறுப்பு அதிகமாக வந்தது.

அப்போதும் அவர் தன்னை வெளிப்படுத்தவில்லை. அஞ்சலி மீது இயக்குனர் களஞ்சியம் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்தார். இதில் நேரில் ஆஜராகுமாறு அஞ்சலிக்கு பலதடவை சம்மன் அனுப்பப்பட்டது. ஆனாலும் அவர் வரவில்லை. இறுதியில் நீதிபதி பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டார்.

அஞ்சலி எங்கு இருக்கிறார் என்று மர்மம் நீடிப்பதாக திரையுலகினர் கிசுகிசுக்கின்றனர். தமிழ் படங்களில் அவரை நடிக்க வைக்கவும் இயக்குனர்கள் பலர் விரும்புகிறார்கள். ஆனால் அஞ்சலியை தொடர்பு கொள்ள முடிய வில்லை. அவர் ஜேர்மனியில் தலைமறைவாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.