அலரி மாளிகைக்கு முன்பாக புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்த இந்தியப் பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இன்று முற்பகல் அவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்டுள்ள 36 வயதான சந்தேகநபர், தமிழகத்தைச் சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.
சந்தேகநபரிடம் பொலிஸார் தொடர்ந்தும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.