இலங்கை – தென்னாபிரிக்கா கிரிக்கெட் போட்டியின்போது மைதானத்தை முற்றுகையிட்ட தேனீக்கள்!!

484

இலங்கை மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி ஜோகன்னஸ்பர்க் மைதானத்தில் நேற்று நடைபெற்றது.

இப் போட்டியில் தென்னாபிரிக்க அணி 7 விக்கட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது.

இப் போட்டியின் இடையில் தேன் பூச்சிகள் இடையூறு ஏற்படுத்தியுள்ளன. இதனால் போட்டி தற்காலிகமாக சிறிதுநேரம் இடைநிறுத்தப்பட்டது.

மைதானத்தை முழுமையாக சூழ்ந்து கொண்ட தேனீக்களால் இரு அணி வீரர்களும் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.