காரைதீவில் புதைக்கப்பட்ட சடலங்கள் வெளியே தெரிவதால் மக்கள் அசௌகரியத்தில்!!

236

 
சீரற்ற காலநிலை காரணமாக பெய்த தொடர் மழையினால் கடற்கரையை அண்டி அமைந்துள்ள காரைதீவு பொது மயானத்தில் புதைக்கப்பட்ட சடலங்கள் வெளியே தெரியும் நிலை தோன்றியுள்ளது. அண்மைக்காலமாக அப்பகுதியில் சடலங்களும், எலும்புகளும் மக்களால் அவதானிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு வருடமும் வெள்ளம் ஏற்படும் காலங்களில், இதுபோன்று சடலங்கள் வெளியே தெரியும் நிலை காரைதீவு மயானத்தில் ஏற்பட்டுக் கொண்டு இருப்பதாக மக்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இதனால் அம்மயானம் பெரும் சவாலை எதிர்நோக்கியுள்ளது என பொது மக்கள் தெரிவிக்கின்றனர். ஆகவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்படி விடயத்தில் கூடிய கவனம் செலுத்தி காரைதீவு மாயனத்தை பாதுகாக்க உதவுமாறு பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.