வீட்டிற்கு சென்றுகொண்டிருந்த யுவதியை கடத்தியவர்கள் கைது!!

226

வீட்டிற்கு சென்றுகொண்டிருந்த யுவதி ஒருவர் சில நபர்களால் கடத்தி செல்ல முற்பட்ட சம்பவம் ஒன்று நேற்று மொனராகலை பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் பிரபல வர்த்தகர் ஒருவரும், அவருக்கு உடந்தையாக செயற்பட்ட 3 சந்தேக நபர்களையும் பொலிஸார் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறு கடத்த முற்பட்ட யுவதி முன்னர் இந்த வர்த்தகரின் மசாஜ் நிலையம் ஒன்றில் சேவை புரிந்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

மேலும் குறித்த யுவதி 5 மசாஜ் நிலையங்களை நடாத்துவற்கு முயற்சித்துள்ளார், இதன் காரணமாக கடத்த முயன்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை, மொனராகலை நீதாவன் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.