இலங்கை அணியின் தலைவராக உபுல் தரங்க!!

336

அவுஸ்திரேலியாவுடன் இடம்பெறவுள்ள இருபதுக்கு இருபது கிரிக்கட் போட்டியின் போது இலங்கை அணிக்கு உபுல் தரங்க தலைமை தாங்குவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை கிரிக்கட் நிறுவனம் இதனைக் கூறியுள்ளது.

உபாதை காரணமாக அணித்தலைவர் மெத்திவ்ஸ் இந்தப் போட்டிகளில் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக உபுல் தரங்க இலங்கை அணியின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.