துவிச்­சக்­கர வண்­டியில் 500 கிலோ­மீற்றர் தூரம் தவ­றான திசையில் பயணம் செய்த நபர்!!

636

சீனாவைச் சேர்ந்த நபர் ஒருவர், தான் பணி­யாற்­றிய நக­ரி­லி­ருந்து சொந்த ஊருக்கு துவிச்­சக்­கர வண்டியில் செல்­லும்­போது சுமார் 500 கிலோ­மீற்றர் தூரம் எதிர் திசையில் சென்­றுள்ளார்.

இந்­நபர் சீனாவின் ஷாங்டோங் மாகா­ணத்­தி­லுள்ள ரிஸாவோ நகரில் பணி­யாற்­று­பவர். சீன புத்தாண்டு  தினத்­தை­யொட்டி தனது சொந்த ஊருக்குச் செல்­வ­தற்கு இவர் தரானார்.  இந்­நபர் பணியாற்றும் ரிஸாவோ நக­ரி­லி­ருந்து சுமார் 1700 கிலோ­மீற்றர் தூரத்தில் ஹெய்­லோங்­ஜியாங் மாகாணத்தில் குய்­கிஹார் எனும் நகரில் இவரின் வீடு உள்­ளது.

பெரும்­பா­லான சீன மக்கள் விடு­மு­றையில் ஊருக்குச் செல்­வ­தற்கு ரயில் அல்ல பஸ்ஸை பயன்படுத்திய­போது, 1700 கிலோ­மீற்றர் சைக்கிள் மூலம் பயணம் செய்­ய­வ­தற்கு இவர் தீர்­மா­னித்தார்.

ஆனால், தவ­றான திசையில் பய­ணத்தை ஆரம்­பித்த இவர், சுமார் 500 கிலோ­மீற்றர் தூரம் தவ­றான பாதையில் சென்று கொண்­டி­ருந்தார். வரை­ப­டங்கள் எதையும் பார்த்து அறி­வ­தற்கு முடி­யாத நிலையில் இருந்த இவர், மற்­ற­வர்­களின் உத­வி­யு­ட­னேயே பாதையை அறிந்­து­கொள்ள வேண்­டிய நிலையில் இருந்தார்.

அன்ஹுன் மாகா­ணத்தின் வுஹு நகரில் அதி­வேக நெடுஞ்­சா­லையில் துவிச்­சக்­கர வண்­டியில் இவர் சென்­று­கொண்­டி­ருந்­த­போது பொலி­ஸாரால் தடுத்து நிறுத்­தப்­பட்டார்.

அவ்­வீ­தியில் சைக்­கிள்கள் செல்­வ­தற்கு அனு­ம­தி­யில்­லாத நிலையில் பொலிஸார் அவரை வழி­ம­றித்து விசா­ரித்­தனர். அப்­போதே அவர் எதி­ரான திசையில் 500 கிலே­மீற்றர் தூரம் பயணம் செய்­தி­ருப்­பதை பொலிஸார் உணர்ந்­தனர்.

அந்­நபர் மீது வுஹு நகர பொலிஸ் உத்­தி­யோ­கத்­தர்­களும், நெடுஞ்­சா­லையில் கட்­டணம் அற­விடும் உத்­தி­யோ­கத்­தர்­களும் அனு­தாபம் கொண்­டனர்.

இதனால், அவரை மேலும் 2200 கிலோ­மீற்றர் துவிச்­சக்­கர வண்­டியில் பயணம் செய்ய வைக்காமல், அவர்கள் அனைவரும் இணைந்து, வாகனத்தில் பயணம் செய்வதற்கு டிக்கெட் வாங்கிக் கொடுத்து அந்நபரை வீட்டுக்கு அனுப்பிவைத்தனர்.