வவுனியா மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட 23 விளையாட்டுக் கழகங்களுக்கு உதைப்பந்தாட்ட உபகரணங்கள்!!

223

 
நேற்று (04.2.2017) வவுனியா மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட 23 விளையாட்டு கழகங்களுக்கு உதைப்பந்தாட்ட உபகரணங்கள் வழங்கப்பட்டது.

வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் வன்னி மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத் தலைவரும் பாராளுமன்ற குழுக்களின் அவைத் தலைவருமாகிய செல்வம் அடைக்கலநாதன் அவர்களின் பண்முகப்படுத்தப்பட்ட நிதி (325 000) மூன்று இலட்சத்து இருபத்தி ஐயாயிரம் ரூபாய் பெறுமதியான உபகரணங்கள் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கம், வட மாகாண சபை உறுப்பினர் செந்திலநாதன் மயூரன் வவுனியா மாவட்ட உதைப்பந்தாட்ட சம்மேளனத்தின் தலைவர் திரு.ஜோன்ஷன் வவுனியா மாவட்ட உதைப்பந்தாட்ட சம்மேளனத்தின் செயலாளர் திரு.நாகராஜன் வவுனியா மாவட்ட உதைப்பந்தாட்ட சம்மேளனத்தின் பொருளாளர் ஜனாப் A.R.M.லறீப் உட்பட விளையாட்டுக் கழகங்களின் பிரதிநிதிகள் கலந்து சிறப்பித்தனர்.