தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் ஒழுங்கமைப்பில் ஜெர்மனில் வசிக்கும் திரு.திருமதி ராகவன் தேவகி குடும்பத்தினரால் நேற்று (04.02.2017) சனிக்கிழமை முழு நாளுக்குமான விசேட உணவும், பழங்களும் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இம் மதிய உணவு வழங்குகின்ற இவ் நிகழ்வு தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் தலைவர் சு.காண்டீபன் தலைமையில் நடைபெற்றது.
தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் அழைப்பின் பெயரில் அதிதிகளாக ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின்(புளொட்) உபதலைவரும், வவுனியா நகர சபையின் முன்னாள் உப நகர பிதாவுமாகிய க.சந்திரகுலசிங்கம்(மோகன்), தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் ஆலோசகர் மு.கண்ணதாசன், வவுனியா வாடி வீட்டின் இயக்குனரும், இந்து அன்பகத்தின் ஆயுள் கால உறுப்பினருமான மா.கதிர்காமராஜா(புஸ்), ஆகியோருடன் தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் செயலாளரும், இளைஞர் பாராளுமன்ற உறுப்பினருமான ஸ்ரீ.கேசவன், உப தலைவர் பி.கெர்சோன், கழகத்தின் உறுப்பினர்களான வ.பிரதீபன், ஜெ.கஜுரன் ஆகியோர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.