பூமி அருகாமையில் பறந்து வந்த விண்கல்.. தொடரும் ஆபத்துக்கள்.. நாசா எச்சரிக்கை..

456

earth-600
நேற்று ஒரு பேருந்து அளவிலான விண்கல்லொன்று பூமிக்கு மிக அருகில் வந்து சென்றதாக நாசா அறிவித்துள்ளது. 2013-எல்.ஆர்.6 என பெயரிடப்பட்ட அந்த விண் கல் கிட்டத்தட்ட பெருந்து அளவில் இருந்ததாகவும் மேலும் பூமிக்கு மிக அருகில் வந்து சென்றதாகவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

சுமார் 30 அடி அகலமுடைய அந்த விண்கல்லால் எந்த அபாயமும் பூமிக்கோ அல்லது செயற்கைகோள்களுக்கோ ஏற்படவில்லை என நாசா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் கியூ.இ-2 என்று பெயரிடப்பட்ட 2.7 கிலோ மீட்டர் நீளமுடைய ஒரு விண்பாறை ஒன்று இதேபோன்று பூமிக்கு அருகில் வந்து சென்றது குறிப்பிடத்தக்கது.

ஆனால், இந்தநிலை நீடித்தால் விண்கற்கள் அல்லது விண்பாறைகளால் பூமிக்கு ஏதேனும் பாதிப்புகள் ஏற்படலாம், எனவே இப்போதிருந்தே நாம் எச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது என நாசா எச்சரித்துள்ளதுகுறிப்பிடத்தக்கது.