வவுனியாவில் ‘ஒன்றிணைவோம் கைகொடுப்போம் போராடுவோம்’ விழிப்புணர்வு!!

358

 
ரணில், மைத்திரி அரசு கல்வி, சுகாதாரத்தினை நாசமாக்கின்றது மக்களே உரிமைகளை வென்றெடுத்திட போராடுவோம் என்ற தொனிப்பொருளில் வவுனியா மணிக்கூட்டுக் கோபுரத்திற்கு முன்பாக இன்று (06.02.2017) காலை 10 மணியளவில் ஒன்றிணைந்த அனைத்துப் பல்கலைக்கழக மாணவர்களர் ஒன்றியம் மருத்துவ பீட மாணவர்கள் ஒருங்கமைப்புச் செயற்பாட்டுக் குழு ஏற்பாடு செய்த மக்கள் கையெழுத்துப் போராட்டம் மற்றும் விழிப்புணர்வு என்பன இடம்பெற்றது.

கல்வி, சுகாதாரம், அடிப்படை உரிமைகளை வென்றெடுப்பதற்காக, மாலபே சைட்டம் கல்லூரிக்கு எதிராக, பாடசாலைகளில் பணம் அறவிடுவதற்கு எதிராக, தொழிலாளர்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்காக என்ற தொனிப்பொருளில் இளைஞர்கள், யுவதிகள் எனப் பலரும் கலந்து கொண்டுள்ளனர்.